மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன. இதுகுறித்து, சச்சின் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு இந்தியனின் கனவும் பாரத ரத்னா விருது பெறுவதாகவே இருக்கும் என்று கூறினார். அவருக்கு இவ்விருது வழங்க வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் இதுகுறித்து இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது கிடைக்கும் பட்சதத்தில், இவ்விருது பெறும் இளம் இந்தியர் என்ற சாதனையை இந்த சாதனை நாயகன் நிகழ்த்துவார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment