Thursday, February 10, 2011

சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார் கருணாநிதி! -சுப்பிரமணிய சாமி

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி விரைவில் ஜெயிலுக்குப் போவார் என்று கூறினார் சுப்பிரமணிய சாமி.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடலி

ல் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

தலைத் தொடர்புத் துறையில் சமீபத்தில் நடந்த ஊழலில் ஆ ராசாவுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் சமமான பங்குள்ளது. இந்த குற்றவாளிகள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். இதை நீங்கள் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கருணாநிதியையும் ராஜாவையும் தாங்கிப் பிடித்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான். ஸ்பெக்ட்ரம் பணம் மொத்தத்தையும் இந்த மூவரும்தான் பங்கு போட்டுக் கொண்டனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தவரை இந்த மூவரும்தான் பெரிய திமிங்கிலங்கள். இவர்களை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பிரதமர் மன்மோகன்சிங். அவரது தேசப்பற்று குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், நாட்டை சில குற்றவாளிகள் சுரண்டிக் கொண்டிருப்பதை அவர் மவுனமாக வேடிக்கைப் பார்த்ததைத்தான் கண்டிக்கிறேன்..., என்றார்.

2 ஜி ஊழலை வெளிக்கொணர்ந்ததில் சுப்பிரமணிய சாமிக்கு பெரும் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ 1.76 லட்சம் கோடி என்று சிஏஜி அறிக்கை வந்ததும், சாமிதொடர்ந்த பொது நல வழக்கின் நீட்சியாகவே தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த ராசா ராஜினாமா செய்தார். இப்போது கைதாகி சிறையில் உள்ளார்

1 comment:

  1. நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான். இந்த ஊழலின் முக்கிய குற்றவாளியும், அதிக பலன் அடைந்த சோனியாவும், காங்கிரஸ் கட்சியும் வழக்கு விசாரணை வளையத்திற்குள் இன்னும் வராமல் இருப்பது ஏன்? என்று புரியவில்லை.

    ReplyDelete