Wednesday, February 2, 2011

ஸ்பெக்ட்ரம்: கடந்து வந்த பாதை


தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத்தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த்தா பெகுரா, ராஜாவின் தனிசெயலாளர் ஆர்.கே.சந்தோலியா கைதுசெய்யப்பட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுமுறைகேட்டால்
நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதுஎன இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2007 மே 18: தி.மு.க., வைச்சேர்ந்த ராஜா மத்திய தகவல்மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆகஸ்ட் 18: டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆகஸ்ட் 28: ராஜா தலைமையிலானமத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. "முதலில் வருபவருக்கேமுன்னுரிமை அளிப்பது' என்றநடைமுறையை பின்பற்ற முடிவுசெய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள்இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008 வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது.இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார்நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல் பெரும் நஷ்டம்ஏற்பட காரணமாக இந்த முடிவுஅமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்., 20 - 25: "யூனிடெக், லூப்,டாடாகாம் மற்றும் ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் யூனிடெக்மற்றும் ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில்எவ்வித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2007 டிச., : இவ்விவகாரம் தொடர்பாகநிதி அமைச்சக அதிகாரி ராஜினாமாசெய்தார். அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர்ஓய்வு பெற்றுவிட்டார். ஸ்வான் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருஅதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜன., 1 - 10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுமுன்னாள் செயலாளராக பணியாற்றியசித்தார்த்தா பெகுராவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில்2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கானஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிட்ட நான்குநிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்., - அக்., : ஸ்வான் நிறுவனம்45 சதவீத பங்குகளை எட்டிசேலட் என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக்நிறுவனம் 60 சதவீத பங்குகளைடெலினார் என்ற நார்வே நாட்டுநிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய்மட்டுமே செலவழித்து யூனிடெக்நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் 26 சதவீத பங்குகளை டோகோமா என்ற ஜப்பான்நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70 ஆயிரத்து 22.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10 ஆயிரத்து 772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்டஒன்பது லைசென்சில் மட்டும்60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் 122 "லைசென்ஸ்கள்' வழங்கப்பட்டுள்ளன.
நவ., 15: மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பியது. மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 அக்., 21: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக 2008 நவம்பர் 29,
2009 அக்., 31, 2010 மார்ச் 8, மார்ச்13 ஆகிய தேதிகளில் பிரதமர்மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களைஎழுதினார்.
2010 ஏப்., 12: சுப்ரமணிய சாமி டில்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்.
அக்., 29: மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதே போன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்குகளிலும் கடைபிடிப்பீர்களா' என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
நவ., 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும்தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ., 11: மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில்2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனவே இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரணை தேவையில்லை என்றுதெரிவித்தது.
நவ., 14: ராஜா அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.
நவ., 15: மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக கபில்சிபல் பொறுப்பேற்றார்.
டிச., 8: ராஜா அவரது நண்பர்சாதிக் பாட்ஷா மற்றும் ராஜாவின்உறவினர்கள் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியது.
டிச., 13: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் (23 நாட்கள்) முழுவதும் முடங்கியது. இதனால் அரசுக்கு 146 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
டிச., 15: நிரா ராடியா மற்றும் முன்னாள் டிராய் சேர்மேன் பிரதீப் பைஜால் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., ரெய்டு நடந்தது.
டிச., 24, 25, 31: டில்லியில் சி.பி.ஐ.,அலுவலகத்தில் ராஜாவிடம் விசாரணை நடந்தது.
2011 பிப்., 1: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்தஅறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் சமர்பித்தார்.
பிப்., 1: ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ.,விசாரணை நடத்தியது.
பிப்., 2: ராஜா கைது செய்யப்பட்டார்.

ராஜா - பயோடேட்டா
பெயர் : ஆ. ராஜா
தந்தை பெயர் : எஸ்.கே.ஆண்டிமுத்து
தாயார் பெயர் : சின்னப்பிள்ளை
பிறந்ததேதி : 5, அக்டோபர், 1963
பிறந்த இடம் : பெரம்பலூர்
மனைவி பெயர் : எம்.ஏ.பரமேஸ்வரி
குழந்தைகள் : ஒரு மகள் ( பெயர்: மயூரி)
கட்சி : தி.மு.க.,
எம்.பி., தொகுதி : நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றுபார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்வித் தகுதி : பி.எஸ்.சி., எம்.எல்.,
வகித்த பதவிகள் : 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் 2வது முறையாக வெற்றிபெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று( 2004 மே 23 - 2007 மே 17) மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்
தொடர்பு அமைச்சராக 2வது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார். கட்சித்
தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால் , வட்டார அளவில் செல்வாக்கு பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர் 
கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.(dinamalar)

No comments:

Post a Comment