கரூரில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நமீதா கலந்துகொள்ளச் சம்மதித்திருந்தார்.
அதற்காக அவர் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும் டிரைவர் உடுப்பு அணிந்த ஒருவர் வந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல வந்த டிரைவர் நான் தான் என்று சொல்ல, அவருடன் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
ஆனால், உண்மையிலேயே நமீதாவை ஏற்றிச் செல்ல வந்த டிரைவர் இதைக் கவனித்து விழா குழுவினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டார்.
பிடிப்பட்ட நபர் தான் நமீதாவின் ரசிகர் என்று சொல்ல, மச்சான்களின் வேகத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறார் நமீதா.
No comments:
Post a Comment