Tuesday, May 3, 2011

காரமான 'தாரம்'!

தாரம் என்ற பெயரில் குண்டக்க மண்டக்க கதையுடன் தமிழுக்கு ஒரு திரைப்படம் வருகிறது - மலையாளத்திலிருந்து.


வித்தியாசமான கதை என்ற பெயரில் சர்ச்சையான கதைகளுடன் படம் எடுப்பது தற்போது பேஷனாகி விட்டது.

அந்த வரிசையில் இந்த தாரமும் இணைகிறது. இப்படம் மலையாளத்தில் வெளியான காயம் என்ற படத்தின் டப்பிங் ஆகும். ஸ்வேதா மேனன் நாயகியாக நடித்த படம் இது.

படம் முழுக்க கவர்ச்சிகரமாக வளைய வந்திருப்பார் ஸ்வேதா மேனன். படத்தின் கதை சற்றே காரமானது.

ஊர்ப் பண்ணையாரிடம் செக்ஸ் அடிமையாக சிக்கித் தவிக்கிறார் படத்தின் நாயகி. அவரை மீட்கிறான் நாயகன். தனது வீட்டில் அடைக்கலம் தருகிறான். திருமணமும் செய்து கொள்கிறார்கள். இந்த சமயத்தில் அவன் கொல்லப்படுகிறான்.

இதனால் மறுபடியும் நிர்க்கதியாகும் நாயகனுக்கு ஆறுதலாக இருக்கிறான் கணவரின் தம்பி. இதனால் அவன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. இது ஊரில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மகன் ஸ்தானத்தில் உள்ளவன் மீது மோகம் கொள்வதா என்று பொங்குகிறது ஊர்.

அதற்கு நாயகி, மனைவி இறந்து விட்டால் அவளது தங்கச்சியை ஆண்கள் மணக்கலாம், ஆனால் நான் எனது கணவரின் தம்பியை மணக்கக் கூடாதா என்று கேட்கிறாள்.

அதன் பிறகு இருவரும் என்ன ஆகிறார்கள். கை பிடிக்கிறார்களா என்பது படத்தின் மீதிக் கதை.

படு காரமான கதையுடன் கூடிய இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி, சலசலப்பையும், பரபரப்பையும் உருவாக்கியது. இதுதான் தற்போது தாரம் என்ற பெயரில் டப் ஆகி தமிழுக்கு வருகிறது.

படத்தில் அபர்ணாவும் நடித்துள்ளார். மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். நம்ம ஊர் பாலா, நாயகனின் தம்பி வேடத்தில் வருகிறார்.

ஏற்கனவே கணவரின் தம்பி மீது கள்ளத்தனமாக மோகம் கொள்ளும் பாத்திரத்தில் சங்கீதா நடித்த படம் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் மருமகள், மாமனார் இடையிலான முறை தவறிய காதலை வெளிப்படுத்திய படமும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாரம் படம் தமிழகத்தில் என்ன மாதிரியான சலசலப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment