Showing posts with label computer tips. Show all posts
Showing posts with label computer tips. Show all posts

Wednesday, July 25, 2012

பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்

தொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர். எனவே பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்குவதிலும், இணைய தள அக்கவுண்ட்களைக் கையாள்வதிலும் நாம் குறைந்த பட்ச அளவிலாவது பாதுகாப்பு வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
சில பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள், மிக வலுவான, தனிப்பட்ட பாஸ்வேர்ட்களை, ஒன்றுக்கு

அன்பு .நெட்: உங்கள் வலைபக்கத்தில் ரைட் கிளிக்கை தடை செய்வது எப்...

அன்பு .நெட்: உங்கள் வலைபக்கத்தில் ரைட் கிளிக்கை தடை செய்வது எப்...: உங்களுடைய வலைபக்கத்தில் நீங்கள் பதிவு செய்யும் பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்தாமலும் அந்த பக்கத்தின் பேஜ் எலிமெண்டை மறைக்கும் பொருட்டும் பொத...

உங்கள் வலைபக்கத்தில் ரைட் கிளிக்கை தடை செய்வது எப்படி?

உங்களுடைய வலைபக்கத்தில் நீங்கள் பதிவு செய்யும் பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்தாமலும் அந்த பக்கத்தின் பேஜ் எலிமெண்டை மறைக்கும் பொருட்டும் பொதுவாக நாம் ரைட் கிளிக் வசதியை தடை செய்ய விரும்புவோம் .


இதனை நாம் செயல்படுத்துவது மிகவும் சுலபம். தங்களுடைய வலை பக்கத்திற்கு சென்று desighn=>layout=>ad a gadget சென்று html  code-ஐ  பயன்படுத்தி ரைட் கிளிக் வசதியை தடைசெய்யலாம் .


இதனை பயன்படுத்தி பார்த்து நன்மை தீமைகளை உணர்ந்துகொள்ளுங்கள் .


html code-ஐ  பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

யுடியூப்பில் இனி உண்மையான பெயரை வெளியிட வேண்டும்!


கூகுளின் பொழுதுபோக்குத் தளமான யுடியூப்புக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த யுடியூப்பில் நினைக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோக்களுக்கு விமர்சனங்களும் எழுதலாம்.
ஒவ்வொரு நாளும் யுடியூப்பில் ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவேற்ற் செய்கின்றனர். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஒரு சிலர் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் தங்களது புனைப் பெயர்களையேத் தருகின்றனர்.
மேலும் யுடியூப்பில் வரும் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும்,

Friday, July 6, 2012

வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?


 ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள்

Friday, October 15, 2010

இந்தியாவிற்கான தனி கணினி இயக்க மென்பொருள்

இந்தியாவிற்காகவே பிரத்யேகமான கணினி இயக்க மென்பொருள் உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defence Research and Development Organization - DRDO) ஈடுபட்டு வருவதாக அதன் இயக்குனரும், விஞ்ஞானியுமான முனைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முனைவர் வி.கே.சரஸ்வத், “மென்பொருளை உருவாக்கத்தைப் பொறுத்தவரை நம்மிடம் பல குறைபாடுகள் உள்ளன, அதில் முக்கியமானது நமக்கென்று தனித்த கணினி இயக்க அமைப்பு இல்லாமையே. பாதுகாப்பு, பொருளாதாரம், வங்கி ஆகிய துறைகளில் நாம் சேமித்து வைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளைக் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நமக்கென்று தனித்த கணினி இயக்க அமைப்பு அவசியமாகிறது” என்று கூறிய சரஸ்வத்,
அப்படிப்பட்ட புதிய கணினி இயக்க மென்பொருள் (Operating System -OS) உருவாக்க டெல்லிலும், பெங்களூருவிலும் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த இரு மையங்களின் ஒரே செயல் இலக்கு, இந்தியாவிற்கென தனித்த கணினி இயக்க அமைப்பை உருவாக்குவதே என்று கூறிய சரஸ்வத், தேச அளவிலான இந்த மாபெரும் முயற்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் முன்னெடுக்கிறது என்றும், இதற்கு பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் இயங்கும் மென்பொருள் நிறுவனங்களும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், சென்னையிலுள்ள இந்திய தொழிற் கல்விக் கழகம் ஆகியவற்றின் உதவிகள் நாடப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

“இணையத்தின் சந்தேகத்திற்குரிய நம்பகத்தன்மை, நமது முக்கியத் துறைகளின் கணினிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாம் சேமித்து வைத்து முக்கியத்துவம் வாய்ந்த தரவுகள் களவாடப்பட்டமை ஆகியன நமக்கென்று தனித்த இயக்க அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நாம் நமது தரவுகளை பாதுகாத்தாக வேண்டும், அதற்கு ஒரே வழி நமக்கான கணினி இயக்க அமைப்பை நாமே உருவாக்க வேண்டும், அது நமது முழுமையான தனித்த தொழி்ல்நுட்பமாக இருக்கவேண்டும். அதன் ஆதார விதி (Source Code) நம்மிடம் இருக்கும். அது என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்று விரிவாக பேசியுள்ளார்.

பெங்களூருவிலும், டெல்லியிலும் உள்ள மையங்களில் இதற்காக 50 மென்பொருள் நெறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான அரசின் ஒப்புதல்கள் கோரப்பட்டுள்ளது என்றும் சரஸ்வத் கூறியுள்ளார். பாதுகாப்புக் காரணங்ளால் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்களைத் தர இயலாது என்றும் சரஸ்வத் கூறினார்.
thanks inneram.com