Sunday, December 2, 2012

அனடமிக் செவி வழி தொடு சிகிச்சை 2012




சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் இந்த வைத்திய முறையை பற்றி கூறினார் மேலும் ஒரு குறுந்தகட்டு கோப்பையும் கொடுத்து நேரம் இருந்தால் போட்டு பாருங்கள் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார் .

கடந்த இரண்டு வாரங்களாக நான் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தேன்.  அதனால் எனக்கு ஏதும் உதவி இதில் இருக்குமோ என்ற நம்பிக்கையில் முழுவதும் பார்த்தேன் .

ஆரம்பத்தில் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  எந்த ஒரு நோயும் இம்முறையில் குணமாக எந்த மருந்து மாத்திரைகளோ அல்லது மூலிகை மருந்துகளோ பத்தியமோ எதுவுமே இல்லை என்று சொன்னதை கேட்டு மிகவும் ஆச்சர்யமடைந்தேன் .

நமது உடலில் ஒரு சுரப்பி இருக்கிறது அது ஒரு நீரை சுரக்கிறது அந்த நீர் உலகில் உள்ள அணைத்து நோயையும் குணப்படுத்துகிறது.  இதில் சொல்லித்தரும் சிலவற்றை நீங்கள் செய்தால் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே அந்த சுரப்பியை சுரக்க செய்து உங்களுக்கு வரும் எந்த நோயையும் குணப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டது .

எனக்கு ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை இல்லை என்றாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன்.  3 நாட்களில் நல்ல பலன் கிடைத்தது . எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது .  இப்போது வழக்கம் போல உணவுகள் உட்கொள்கிறேன் சக்கரையும் சேர்த்துதான்.

இந்த சிகிச்சை முறை மிகவும் அருமையாக இருந்தது .  இப்போது நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன் .

இந்த சிகிச்சையின் உட்பொருள் "பசியின்றி எதையும் உண்ணாதீர்கள் - உண்ணும்போது உணவைதவிர எதையும் எண்ணாதீர்கள் " என்பதுதான்.

மனித மூளையானது ஒரு நோயை உண்டு பண்ணவும் மற்றும் அந்த நோயை நீக்கவும் சக்தி படைத்தது என்பதே இதனுடைய உட்பொருள் .

மேலும் அதிக விவரங்களை நீங்கள் அறிய விரும்பினால் இந்த வலை தளம் சென்று பாருங்கள் http://www.anatomictherapy.org.

மின்சார சிக்கலினால் அதிக பதிவுகளை போட  முடியவில்லை.  என்னால் முடிந்த அளவிற்கு எழுதுகிறேன் .  தங்கள் வருகைக்கு நன்றி.

No comments:

Post a Comment