மனிதா......
இதுவே உனது விதி!
நீ ஓட்டு போட்டதினால் வந்த சதி!
இன்னமும் அனுபவிப்பாய் மீதி!
மொத்தத்தில் நீ ஒரு அப்பாவி!
அப்பாவி மனிதனாய் இருந்துவிட்டாய்...
ஆணிவேரையே மறந்துவிட்டாய்...
ஓட்டுபோடுவது உனக்காக ...
நீ ஒட்டு போட்டதோ பணத்திற்காக!
பணத்தை நம்ம்பி ஏமாந்தாய்!
இனி பணதிற்கெங்கு நீ போவாய்?
உயர்ந்ததோ விலையேற்றம்!
தாழ்ந்ததோ மனித முன்னேற்றம்!
முன்னேறுவோம் என்று ஓட்டு போட்டாய்...
முன்னேறினாய் முதலிலிருந்து கடைசிக்கு!
கடைசிக்கு சென்றும் திருந்தாவிட்டால்...
கலங்கியதை நீயும் மறந்துவிட்டால்...
காணாமல் போவாய் துரும்பும் இல்லாமல்!
-அன்பு
No comments:
Post a Comment