Sunday, October 24, 2010

சூதாட்டதரகருடன் ரைனாவுக்கு தொடர்பா?

அண்மையில் இலங்கை சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்டிருந்த போது, இந்தியவீரர் சுரேஷ் ரெய்னாவோடு சேர்ந்து சுற்றிவந்த ஒரு பெண்  சூதாட்டப் பதிவாளராக இருக்கலாம் என்று இலங்கை ஊடகங்கள்,குறிப்பாக ஸண்டே டைம்ஸ் என்ற இதழும் மற்றவையும்  செய்தி வெளியிட்டிருந்தன.  இதுபற்றிய பரபரப்பும் விசாரணைகளும் கிரிக்கெட் உலகில் இருந்து வந்தன.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த BCCI  பொதுச்செயலாளர் சென்னை ஸ்ரீனிவாசன் "இது அபத்தமானது, உண்மையற்றது" என்று கருத்து தெரிவித்துள்ளார். "எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லையே" என்றார் N ஸ்ரீனிவாசன்.
 

இதேபோல கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர் சுக்லாவும் கருத்தளித்துள்ளார் "இச்செய்தி உண்மைக்கு மாறானது, ஐ சி சியிடமிருந்தோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திடமிருந்தோ எங்களுக்கு ஏதும் தகவல் வரவில்லை" என்றார் அவர்.
 

"அப்படியானால் அந்தப்பெண் யார்?" என்று கேட்கப்பட்டபோது, அது ரெய்னாவின் முகவர் அவ்வளவுதான், அந்தப்பெண் மேலும் பல வீரர்களுக்கும் விளம்பர முகவராக இருந்துள்ளவரே" என்றார் அவர்.

No comments:

Post a Comment