Thursday, October 7, 2010

அழிவை நோக்கி செல்லும் உலகம்!


  • போட்டி முக்கியம்தான் ஆனால் எதில் போட்டியிட வேண்டும் என்பது  முக்கியம்.
  • அண்டை நாட்டை கைப்பற்றுவதற்கும், அணு ஆயுதங்கள் தயாரிபதற்கும், பக்கத்துக்கு நாட்டிற்கு தீவிரவாதிகளை உருவாக்கி ஊடுருவவைபதற்கும் போட்டிஇடுகின்றன பல நாடுகள்.
  • அணு ஆயுதங்கள் என்பது அவ்வளவு  பாதுகாப்பானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனாலும் அதை ஒரு கௌரவமாக நினைக்கின்றன பல நாடுகள். 
  • வாரத்திற்கு ஒரு ஏவுகணை சோதனை செய்து தனது பலத்தை நிருபிக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக கொண்டுள்ளனர். 
  • ராக்கெட்டுகளை ஏவி புவியின் அமைதியை கெடுத்தது பத்தாதென்று, வானின் இயற்கை நிலையையும் மாற்றி வருகின்றனர். 
  • நவீன தொழில் நுற்பம் என்று இவர்கள் தயாரிக்கும் பொருள்களினால் புவி வெட்பமயமாகி வருகின்றது. 
  • புவி வெட்பமாவதால் கடலில் உள்ள பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடலின் பரப்பு அதிகமாகிறது.  நிலத்தின் பரப்பளவு  குறுக ஆரம்பித்துவிட்டது. 
  • மனிதனுக்குள் இயற்கையாகவே நிலவவேண்டிய சமாதானம், பொறுமை, நேர்மை என்று எல்லாமே குறைந்துவருகிறது. 
  • அணைத்து மக்களும் ஒன்றாக வாழ்வதுதான் நாடு.  ஆனால் இன்று அனைவரும் சுயநலமாகவே சிந்திக்க தொடங்கிவிட்டனர் என்பது கவலை பட வேண்டிய விஷயம். 
  • தொழில்நுட்பம், புதுமை, நவீன சாதனை என்ற பெயரில் இவர்கள் தயாரிக்கும் பொருள்கள் எல்லாம் இயற்கையை சீரழிக்காமல் பார்த்துகொல்வதில் கவனம் செலுத்தவேண்டும் .
  • இனியாவது, செயற்கையை நேசிப்போம்!  இயற்கையை சுவாசிப்போம்!      -அன்பு                                                                                                                                                    

No comments:

Post a Comment