Saturday, November 27, 2010

இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா

sneka news
















இடுப்பை கிள்ளிய வாலிபரை நடிகை சினேகா திட்டி, எச்சரித்து அனுப்பினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று நடந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார். நீல வண்ண சேலை அணிந்திருந்தார். கழுத்தில் டாலர் செயின் மட்டும் அணிந்திருந்தார். ஓட்டலை திறந்து வைத்த அவர், ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணையை பார்வையிடச் சென்றார். அவரைப் பார்க்கவும், மொபைல் போன் கேமராவில் படம் எடுக்கவும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பண்ணைக்கு சென்ற அவரை, உள்ளூர் பெண்கள் சிலர் மொபைல் போன் மூலம் படம் எடுக்க அனுமதி கேட்டனர். அவரும் சிரித்தபடி, "போஸ் கொடுத்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக நின்றிருந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளினார். டென்ஷனான சினேகா, ""அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க, என்று கடிந்து கொண்டார். உடனிருந்தவர்களும் அந்த வாலிபரை திட்டி, எச்சரித்து அனுப்பினர். சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்

No comments:

Post a Comment