Wednesday, December 29, 2010

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவர் சார்ந்திருக்கும் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் என் தந்தையை கொச்சைப்படுத்தி பேசியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கட்சியின் தலைமையை திருப்திபடுத்த விரும்புகிறார். அவரின் மிரட்டலைக் கண்டு, நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

No comments:

Post a Comment