Monday, December 6, 2010

மோடியை கொல்ல லஷ்கர் திட்டம் ?




சமீப காலமாக விக்கிலீக் இணைய தளம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்களது தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மற்றும் ஆவணங்கள் மூலம் அனுப்பி தகவல்கள் பகிர்ந்து கொண்ட ஏறக்குறைய 2 லட்சத்திற்கும் அதிகமான டாக்மென்ட்கள் வெளியே லீக் செய்யப்பட்டுள்ளது. விக்கி லீக் வெளியிட்டுள்ள தகவல்கள் அமெரிக்காவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்
இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் தகவல்கள் அமெரிக்காவுக்கு சென்ற விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்ட சதி விவரம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிய விவரம் வெளி வந்திருக்கிறது. இதில் மோடியை கார் மூலம் குண்டு வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த விவரம் இந்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 


மேலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கையில் இந்த அமைப்புகள் ஏற்கனவே கால்ஊன்றி விட்டன.இது பெரும் ஆபத்தானது என்றும் குறிப்பிடப்பட்டிருககிறது.
இது போல தென் இந்தியாவில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு தனது பலத்தை நிலைநாட்டிட கர்நாடகா, தமிழகம் கேரளாவில் பயங்கரவாத முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஒரு பயங்கரவாதி ஷாபீக்கபாவுடன் தொடர்பு கொண்டு செல்போனில் பேசப்பட்டுள்ளது. 
இந்த உரையாடலில் தென்கத்தில் பயங்கரவாத மையம் அமைப்பது தொடர்பாக இது அமைப்பதில் எந்த அளவிற்கு சாத்தியம் என கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் , கேரளா , கர்நாடகாவில் மையம் அமைப்பது மூலம் சதிச்செயல்கள் திட்டமிட பெரும் வசதியாக இருக்கும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். (dinamalar)

No comments:

Post a Comment