Thursday, October 6, 2011

"கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்

 ""இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறினார். 

மதுரை மேயர் வேட்பாளர் கவியரசு, கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிப்படை

வசதிகள் துளியும் இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். நேற்று நான் ஒரு எம்.எல்.ஏ., இன்று 29. நாளை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் நிரந்தரமாக முதல்வராக விரும்பவில்லை. ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்கு சேவை செய்வேன். கட்சி துவங்கிய ஏழாண்டில் ஆளும் கட்சியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ச்சி பெற்று எங்கள் கட்சி விளங்குகிறது. பிரசாரத்தில் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். விலை போகாதீர்கள்.
மதுரையில் தே.மு.தி.க.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்தீர்கள். அவர்களும், கவுன்சிலர்களும் உங்களை தேடி வருகின்றனர். இவர்களை போல் மற்ற கவுன்சிலர்கள் மக்களை தேடி சென்றதுண்டா. இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர் என்றார்.

No comments:

Post a Comment