Thursday, April 26, 2012

அனன்யா கை முறிந்தது

மலையாளப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை அனன்யாவுக்கு கை முறிந்தது.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கு, சமீபத்தில் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால்
இந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது.

தற்போது நாடோடி மன்னன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் அனன்யா. விஜிதம்பி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கேரள மாநிலம் கொச்சி அருகே நடந்தது. அனன்யாவை அபுசலீம் தள்ளி விடுவது போன்ற காட்சியை எடுத்தனர். அப்போது அனன்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. கை மணிக்கட்டிலும் முறிவு ஏற்பட்டது.

உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து கை முறிந்ததை உறுதிப்படுத்தினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment