Wednesday, September 5, 2012

கிரிக்கெட்டில் சாதித்தது எப்படி * ரகசியத்தை சொல்கிறார் லட்சுமண்


 ""நெருக்கடியான நேரங்கள் தான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது,'' என, ஓய்வு பெற்ற இந்திய வீரர் லட்சுமண் தெரிவித்தார். 
இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற நிலையிலும், திடீரென ஓய்வை அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகரமாக ஜொலித்தது எப்படி என, லட்சுமண் கூறியது:
எப்போதெல்லாம் அணி நெருக்கடியான நேரத்தில் தவிக்கிறதோ, அதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாட எனக்கு அதிகம் பிடிக்கும். இதுதான் என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனால் தான் ஐதராபாத்தின் முக்கிய பேட்ஸ்மேனாக உருவெடுத்தேன் என்று நினைப்பதுண்டு.
சிக்கலான நேரங்களில் பொறுப்பெடுத்துக் கொண்டு, வழக்கத்துக்கு மாறாக அதிக திறமை வெளிப்படுத்துவேன். இப்படி நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுவது தான் எனது பெரிய வலிமை. 
வெற்றி முக்கியம்:
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திறமை இருக்கும். அது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். பேட்ஸ்மேனாக இருந்து அணிக்கு தேவையான ரன்கள் எடுப்பது, கிடைக்கும் வாய்ப்புகளில் "கேட்ச்' செய்வது தான் எப்போதும் எனது வேலை. என்னை சிறப்பான பேட்டிங் திறனுள்ள வீரராக பார்த்த அனைவருக்கும் நன்றி. 
சச்சின், கங்குலி, கும்ளே என, அனைவருமே என்னைக் கவர்ந்தனர். இந்த வீரர்கள் அனைவருமே, அணியின் கேப்டனாக இருந்தவர்கள். இவர்களது திறமை குறித்த அனுபவங்களை, "டிரசிங் ரூமில்' கேட்டுத் தெரிந்து கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து திறமை வெளிப்படுத்த வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே இவர்களிடம் இருந்தது.
சேவக் பிடிக்கும்:
இப்போதுள்ள வீரர்களில் சேவக்கின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன். ஏனெனில், ஒரு சிலநேரங்களில் இவர் நம்ப முடியாத அளவில் விளையாடுவார். இவருக்கு "பார்ம்' <உள்ளதோ இல்லையோ, சேவக் ஒரு திட்டத்துடன் தான் களத்தில் விளையாடுவார். இவரை நம்ப வேண்டும். சேவக் போல ஏன் விளையாட முடியவில்லை என நான் கூட வியந்தது உண்டு.
இவ்வாறு லட்சுமண் கூறினார். 

No comments:

Post a Comment