Friday, September 28, 2012

மின்சார வாரியத் தலைவராக ஞானதேசிகன்


தமிழக மக்களை அங்கிங்கெனாதபடி வாட்டி வதைத்து வரும் மின்வெட்டுக்கு காரணமாக தமிழக மின்சார வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு ஞானதேசிகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வரலாறு காணாத மின்வெட்டை தமிழகம் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறது. தொழில்நகரமான கோவையில் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மின்சாரவாரியத் தலைவரை மாற்றியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் கே.ஞானதேசிகன் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவராகவும் பணியாற்றுவார். தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment