Monday, October 22, 2012

மீண்டும் சினேகா... திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் முதல் படம்


தமிழ் சினிமாவில் நீண்ட காலம் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காமல் திகழும் நடிகை என்றால் அது இந்த காலகட்டத்தில் சினேகா என்றுதான் சொல்ல வேண்டும்.
2000-ல் ஆரம்பித்து, இன்று வரை தன் மவுசு குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார். இத்தனைக்கும் பெரிய ஹிட் என்று எதுவும் தரவில்லை. கிசுகிசு, எதிர்மறை செய்திகளுக்கும் குறைவில்லை.
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று வழக்கமான ஸ்டேட்மென்ட் விடாமல், அமைதி காத்த சினேகா, இப்போது மீண்டும் பரபரவென நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதுதான் பாலிவுட் ஸ்டைல்.
ஏற்கெனவே திருமண நேரத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இப்போது அந்த ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
 இப்போது அடுத்த படமாக, சேரன் இயக்கும் ஜேகே என்றொரு நண்பன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிக்க கையெழுத்திட்டிருக்கும் முதல் படம் இது.

No comments:

Post a Comment