Tuesday, October 23, 2012

தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.
முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.
பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.
கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.
கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment