Tuesday, November 27, 2012

திருமணமாகிவிட்டால் ஹீரோயின் தகுதி போய்விடுமா?

பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினேகா நடித்திருக்கும் படம் ஹரிதாஸ். இதில் கிஷோரின் ஜோடியாகவும், பத்து வயது சிறுவனின் தாயாகவும் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ஹரிதாஸ் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் என்னை சந்தித்து இந்தக் கதையை சொல்லி நடிக்க முடியுமா என்று கேட்டார். கதை எனக்கு பிடித்திருந்தபோதும். அப்போது என் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால். திருமணம் செய்யப்போகிறேன். அந்த ஏற்பாட்டில் இருக்கிறேன் என்றேன். நான் காத்திருக்கிறேன் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம் தமிழ் நாட்டில் நடிகைகளுக்கு திருணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு ஹீரோயின் தகுதி போய்விட்டதாகத்தான் நினைப்பார்கள். யாரும் ஹீரோயினாக நடிக்க கூப்பிட மாட்டார்கள். அக்கா அண்ணி கேரக்டருக்குத்தான் கூப்பிடுவார்கள். ஆனால் என்னை தைரியமாக அழைத்தார்கள். அதற்காகவே நான் இந்தப் படத்தில் நடித்தேன். இதில் நடித்த சிறுவன் பிருத்விராஜ் என் மகனைப்போலவே உணர்ந்து நடித்தேன். இனி வரும் படங்களில் இதுபோன்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். அக்கா, அண்ணி கேரக்டரிலும் நடிப்பேன். அதுவே படத்தின் முதல் முக்கிய கேரக்டராக இருந்தால். ஹரிதாஸ் என் கேரியரில் முக்கியமான படமாக  இருக்கும்.
source

No comments:

Post a Comment