Saturday, October 30, 2010

தெண்டுல்கரின் “பேட்” ரூ.42 லட்சத்துக்கு ஏலம்


தனியார் நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள், பயன்படுத்திய பொருட்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. இந்தியாவின் “டாப் 25” விளையாட்டு வீரர்களின் பொருட்கள் ஏலத்தில் பங்கேற்றன. இதில் தெண்டுல்கரின் பேட் தான் அதிக தொகைக்கு ஏலம் போனது. 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட் சர்ச் ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர் 163 ரன்கள் குவித்தார். இதில் பயன்படுத்தப்பட்ட பேட் ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
அடுத்து அபினவ் பிந்த்ரா, ராகுல் டிராவிட்டின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது.
 
2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதில் அவர் பயன்படுத்திய ரைபிள் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
ராகுல் டிராவிட் 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இந்த டெஸ்டில் அவர் பயன்படுத்திய பேட் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ரூ.17 1/2லட்சத்துக்கும், அனில் கும்ப்ளே டெஸ்ட்டில் 10 விக்கெட் கைப்பற்றியபோது பயன்படுத்தப்பட்ட ஜெர்சி மற்றும் தொப்பி ரூ.11 1/2 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
தெண்டுல்கர், ஷேவாக், டிராவிட், கும்ப்ளே சாய்னா நேவால், சானியா மிர்சா, அபினவ் பிந்த்ரா, பூட்டியா, மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ஆனந்த், பங்கஜ் அத்வானி உள்பட 25 விளையாட்டு வீரர்களின் பொருட்கள் ஏலம் விடப்பட்டது

தெண்டுல்கரின் “பேட்” ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

 
thanks maalaimalar


No comments:

Post a Comment