Thursday, October 21, 2010

கேள்வியும் பதிலும்-4

கேள்வி: ஆயுரம் அ.தி.மு.க வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறாரே கருணாநிதி? 
பதில்: அவருடைய தலை முன்பைவிட சற்று கனமாக இருக்கிறதே பார்தீர்களா?
(இதற்க்கு பெயர் தான் தலைகனம்)
கேள்வி: அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாக சென்று பிரதமரை சந்தித்து இருக்கின்றனரே?
பதில்: ஆதாயம் என்று வந்துவிட்டால் எதிரியும்  நண்பனாகிவிடுவான் அவர்களுக்கு
கேள்வி: திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ஆச்சரியம் அளிக்கிறதே?
பதில்: அவ்வளவு சொத்தும் தெய்வத்தின்  பெயரால் பாதுகாக்கபடுகிறதே  தவிர பட்டினியால் சாவும் ஏழை மக்களுக்கு பயன்படுவதில்லையே! 
கேள்வி: நயன்தாராவும் பிரபுதேவாவும் கோர்ட்டில் ஆஜராகவில்லையே? 
பதில்: மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கத்தானே செய்யும் 
கேள்வி: தே.மு.தி.க விற்கு ஆதரவு பெருகுகிறதா இல்லை குறைகிறதா?
பதில்: அதே குழப்பத்தில்தான் அதன் தலைவரும் உள்ளார். வரும் தேர்தல் இதற்க்கு பதில் சொல்லும். 
கேள்வி: பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிப்பதை எப்போது நிறுத்தும்?
பதில்: தீவிரவாதத்தால் அது முழுமையாக அழிந்தாலும் அதை செய்யாது என்றே தோன்றுகிறது. 

No comments:

Post a Comment