Friday, October 1, 2010

சாதிக்குமா இந்திய அணி?

       இன்று தொடங்கிய இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கும் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இதில் இந்தியா வெற்றி பெற்றால் தர வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளலாம்.  அதனால் இந்திய அணி வெற்றி பெரும் முனைப்புடன் முழு பலத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.  அதே நேரம் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்வது என்பது சவாலான ஒரு விஷயம்தான்.  சச்சின், டிராவிட், லட்சுமணன், டோனி, ரைனா, கம்பீர், சேவாக், என இந்தியா அணியின் பாட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது .  அதே நேரம் ஜாகிர் கான்,  ஹெர்பஜன் சிங்க், இஷாந்த் சர்மா, ஓஜா, என பந்துவீசும் மிக சிறப்பாக உள்ளது.  உலக தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் எனபது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  சாதிக்குமா  இந்திய அணி?  பொறுத்திருந்து பாப்போம். 

No comments:

Post a Comment