Friday, October 15, 2010

ஆஸ்திரேலியர்களின் சின்னபுத்தி!

     இந்தியர்களின் மனதில் ஆஸ்திரேலியர்கள் மீதான மரியாதை வெகுவாக குறைந்துவிட்டது.  ஏற்கனவே அவர்கள் நாட்டில் தங்கி படிக்கும், வேலை செய்யும் இந்தியர்களை நிறவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கிய அவர்கள் சச்சின் 200 ரன்கள் அடித்ததை தாங்கமுடியாமல் காமன்வெல்த் நகரில் அவர்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.  
     விளையாட்டை விளையாட்டாக எடுதுகொல்லாத சின்னபுத்தி படைத்தவர்களா ஆஸ்திரேலியர்கள்?  என்று மற்றவர்களை என்ன வைத்துவிட்டார்கள்.  விளையாட்டில் திறமைக்கே பரிசு.  இந்திய வீரர்கள் திறமையுடன் விளையாடி வெற்றி பெற்றனர்.  ஏதோ நாம் அவர்களை ஏமாற்றி வெற்றிபெற்றுவிட்டது போல கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள்.  
     இது மேலும் மேலும் ஆஸ்திரேலியர்களின் மீதான நம்பிக்கையை, மரியாதையை குறைத்துவிடும்.  விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமான ஒன்று. வெற்றி ஒன்றை மட்டுமே பெறுபவர்கள் யாரும் இல்லை.  ஒரு வேலை ஆஸ்திரேலியர்கள் அவர்களை அப்படி நினைத்துகொண்டார்கள் போலிருக்கிறது.  
     எது எப்படியோ அவர்களின் சின்ன புத்தி தனமான இந்த செயலால் அவர்களின் மரியாதையை அவர்களே கெடுத்துகொள்ளாமல் இருந்தால் நல்லது.  

No comments:

Post a Comment