அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்த "துப்பறியும் ஆனந்த்' கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறார் கௌதம் வாசுதேவ்மேனன். இக்கதையில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அஜித் இப்படத்திலிருந்து திடீரென விலகினார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் "மங்காத்தா' என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. "விண்ணைத் தாண்டி வருவாயா' ஹிந்தி பதிப்பின் வேலைகளில் இருக்கும் கௌதம் வாசுதேவ்மேனன் இந்தக் கதையை சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். கதை பிடித்து விடவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ஆரம்பித்து விடலாம் என்றிருக்கிறாராம் சூர்யா. அவருக்கு ஏற்ப திரைக்கதை மாற்றங்களும் கதையில் நடக்க இருக்கிறது. ஜனவரியில் படம் தொடங்குமாம்
thanks dinamani.com
No comments:
Post a Comment