Thursday, October 14, 2010

ராஜபக்சேவை வரவேற்கும் தமிழ்நாட்டு ராஜபக்சே!

     காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்துகிறதே என்று நேற்றுவரை பெருமைபட்டுகொண்ட தமிழர்கள் இன்று ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டு இருகின்றனர்.  தமிழின கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்து விழாவை முடிவுசெய்திருகிரார்கள்.  தமிழனுக்கு இதைவிட என்ன அவமானத்தை தேடிதரமுடயும் கருணாநிதியால்.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் இவருக்கு ஈழ தமிழர்கள் மேல் இருக்கும் அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.  தமிழர்களின் உணர்சிகளுக்கு மரியாதையை அளிக்காத ஒரு அரசை நாம் பெற்றிருப்பது உண்மையில் பெருமைபடவேண்டிய விஷயம் அல்ல.காங்கிரஸ் கட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டுள்ள தி.மு.க ராஜபக்சேவை அழைக்க கூடாதென்று  ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.  காலம் இவர்களை மன்னிக்காது.  தகுந்த நேரத்தில் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் மத்திய அரசுக்கும் மைனாரிட்டி தி.மு.க அரசுக்கும் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை.   

No comments:

Post a Comment