Wednesday, October 13, 2010

ஆணவத்திற்கு விழுந்த பலமான அடி

  •  கிரிக்கெட்டில் நாங்கள்தான் எல்லாம்! வெற்றி மட்டுமே எங்களுடையது!  தோல்வி மட்டுமே நாங்கள் எதிரணிக்கு தருவது!  எந்த அணியும் எங்களுக்கு பெரிதல்ல, என்றெல்லாம் பஞ்ச் வசனம் பேசிகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி கடந்த ஓரிரு ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே சந்தித்துவருகிறது. 
  • ஒரு காலத்தில் இவர்கள் ஆடாத ஆட்டமே இல்லை. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜமானதுதான்,  ஆனால் இவர்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தார்கள் நம்மை வெல்ல யாருமே கிடையாது என்று நினைத்துகொண்டார்கள். 
  • அதுதான் இவர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.  எது எப்படியோ  இந்தியாவிடமும் நன்றாக வாங்கி கட்டி கொண்டார்கள் என்பது சற்று பெருமைபடகூடிய விஷயம். "அன்பு மனிதனை வளரவைக்கும், ஆணவம் மனிதனை அழித்துவிடும்" என்பதை இனியாவது புரிந்துகொண்டால் சரி. 

No comments:

Post a Comment