Monday, October 18, 2010

சபாஷ் இந்தியா-வாசிம் அக்ரம்

     வரும் உலககோப்பை தொடருக்காக இந்தியா சிறப்பான முறையில் தயாராகி வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில்  "இந்தியா சிறப்பான முறையில் மிகவும் அபாரமாக  விளையாடிவருகிறது. ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதின் மூலம் இந்தியா உலகின் முதல் அணி என்பதை நிருபித்து இருக்கிறது. ஒரு நாள் தொடருக்கான அணி தேர்வு சிறப்பாக உள்ளது. இளைங்கர்களுக்கு அதிக வாய்பளித்து இருப்பது பாராட்டுக்குரியது. சீனியர் வீரர்கள் இல்லாததால் இந்திய அணியை சாதாரணமாக கருத முடியாது.  சுரேஷ் ரைனா, ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங்க் போன்றவர்கள் மிக சிறப்பாக விளயாடகூடியவர்கள்.  அதிக இளைங்கர்களுக்கு வாய்பளிபதன் மூலம் உலககோப்பைக்கு தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும். டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் பாண்டிங் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது, அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரராகவும் இருக்கிறார்." என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment