Monday, October 18, 2010

கலைஞரின் நேற்றைய காமடி!

     இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு வாழ தி.மு.க. பாடுபடும் என்று கலைஞர் நேற்று கூறினார். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ தி.மு.க ஆரம்ப காலத்தில்  இருந்து பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். சென்ற முறை சோனியா காந்தி தமிழகம் வந்தபோது அவரிடம் இதுபற்றிய ஒரு கடிதம் அளித்தேன் அவரும் இதுகுறித்து உடனடியாக கவனிக்கப்படும் என்று உறுதி அளித்தார் என்றும் கூறினார்.  
     இலங்கை தமிழர்கள் அந்த நாட்டின் உண்மையான குடிமக்கள் என்றும் இனியாவது ராஜபக்சே தனது வீண் வாதங்களையும் பிடிவாதத்தையும் விட்டுவிட்டு தமிழர்கள் நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 
     இலங்கை தமிழர்கள் கூண்டோடு அழிய முக்கிய காரணமான அழிக்கும் அன்னை சோனியாவிடமும் இலங்கை  தமிழர்களை அடியோடு கொன்று குவித்த ராஜபக்சே விடமும் இவர் வேண்டுகோள் விடுக்கிறார். இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் இந்த காமடி பேட்டிகள் என்று தெரியவில்லை. இவர் எந்த முகத்துடன் ஈழ தமிழர்கள் பற்றி பேசுகிரார் என்று தெரியவில்லை. 
     தான் எதை கூறினாலும் தமிழர்கள் அதை அப்படியே நம்பி  விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேட்டி அளிக்கிறார் கலைஞர். வரும் தேர்தல் மட்டுமே இதற்க்கெல்லாம் பதில் சொல்லும் என்பதே மக்கள் குரல். 

No comments:

Post a Comment