Tuesday, November 9, 2010

இதுதான் தீர்ப்பு!

     கோவை மக்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி வேரு ஒன்றும் இருக்க முடியாது.  நமக்கும்  சேர்த்துதான்.  மனிதாபிமானமுள்ள எவருக்கும் சந்தோஷமான செய்தி. அப்பாவி குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொடுமையான முறையில் கொலை செய்த மோகன கிருஷ்ணனை  போலீசார் சுட்டு கொன்றனர். கோவை மக்கள் தங்களது உண்மையான தீபாவளியை நேற்றுதான் கொண்டாடினர். என்கவுண்டருக்கு முன்பு நடந்தது உண்மையோ பொய்யோ குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது.  
    குழந்தைகள் கொல்லப்பட்ட அன்று "தேவை உடனடி தண்டனை"  என்ற தலைப்பில் நமது வலைபதிவில் பதிவிட்டிருந்ததை அப்படியே செய்து காட்டி இருக்கிறது போலீஸ்.  நேற்றுதான் எனக்கும் நல்ல தூக்கம் எனலாம்.  இந்த தண்டனை இவரை போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.  கோவை பொலிசாருக்கு பல கோடி நன்றிகள்.  "தண்டனை கிடைக்கும் என்ற பயமே தவறை குறைக்கும் சரியான வழி".  

No comments:

Post a Comment