Monday, November 1, 2010

உலக கோப்பையைவெல்வது எனது கனவு: டெண்டுல்கர் உணர்ச்சிமயம்!

டெண்டுல்கர் அளித்த பேட்டி விவரம்: ஆசிய கோப்பை, இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடாமல் இருந்தது கடைசி நிமிடத்தில் முடிவு செய்தது. முன்கூட்டியே திட்டமிடவில்லை. எப்போதும் ஒருநாள் போட்டியில் விளையாட நான் தயாராகத்தான் இருக்கிறேன். டெஸ்ட் போட்டிக்கென்று முன்னுரிமை கொடுக்கவில்லை. எனது உடல்நிலையையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உலக கோப்பைக்கு நான் தயாராக வேண்டும். அதை வெல்வதுதான் எனது கனவு.

அதற்கு தேவையானவற்றை நான் செய்ய வேண்டாமா? தென் ஆப்ரிக்க தொடரை பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள். அதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு முக்கியம். உலககோப்பைக்கு முன் வரும் அனைத்து ஆட்டங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கடந்த சில வருடங்களாக நம்பர் 1ல் இருந்து வருகிறோம். அதை தொடர்ச்சியாக பெற இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment