Tuesday, November 23, 2010

நயன்தாரா செய்வது சரியா?

     கடந்த ஒரு மாதமாக செய்தி தாள்களின் ஹாட் நியூஸ் ராஜா விவகாரம், நயன்தாரா விவகாரம் தான்.
 அவர் படத்தில் நடித்து பிரபலமானதைவிட பிரபுதேவா விவகாரத்தில் படு பிரபலமாகிவிட்டார்.  அவரை எதிர்த்து பல மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்க துவங்கயுள்ளன.  ஏற்கனவே சிம்பு விவகாரத்தில் உலக புகழ் பெற்ற நயன்தாரா இப்போது பிரபு தேவா உடனான  காதலில் சிக்கி பல தாய்மார்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார்.  
     காதலின் இலக்கணத்தை மாற்ற முயல்பவர்களுக்கு அந்த காதலே எதிரியாகிவிடும் என்பது தெரியவில்லை நயனுக்கு.  என்ன நடந்தாலும் பிரபு தேவாவை விடுவதாக இல்லை அவருடைய மனைவி ரமலத்.  பிரபு தேவாவுக்காக அவருடைய மனைவியும் நயனும் அடித்துகொல்வது நியாயமா என்று ஒரு பக்கம் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது.  அவருக்கு ஆதரவாக எவரும் குரல் கொடுக்காத சூழநிலையில் அவருக்கு எதிராக பல மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கின்றன என்பதிலேயே யார் பக்கம் நியாயம் உள்ளது என்பது தெரிந்துவிடும்.  
     யார் தன்னை பற்றி என்ன பேசினாலும் எனக்கு  அதைப்பற்றி கவலை இல்லை எனக்கு பிரபு தேவா மட்டுமே போதும் என்ற முடிவில் இருக்கிறார் நயன்.  பிரபு தேவா வும் நயன் கூடவே எங்கும் சுற்றி வருகிறார்.  தான் ஒரு திருமணமானவர் என்பதையும் தனக்கு இரு குழந்தைகள் இருப்பதையும் மறந்து நயனை சுற்றி சுற்றி வருகிறார் பிரபு தேவா.  எது எப்படியோ இவர்களுக்கு தக்க பதிலை காலம் தரும்.       

No comments:

Post a Comment