Monday, November 8, 2010

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: அசார் நம்பிக்கை





போபால், நவ.8: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அணியின் முன்னாள் கேப்டனும், மக்களவை உறுப்பினருமான முகமது அசாருதீன் கூறினார்.
போபாலில் அவர் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்திய அணி சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தக் கோப்பையை இந்தியா வெல்லாவிட்டால் நான் ஏமாற்றமடைவேன். அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்புமிக்க இளம் வீரர்களும் நிறைந்துள்ளனர்.
இந்திய அணிக்கு போட்டியாக இருப்பது இலங்கைதான்.
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தவிர்க்க கடுமையான விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடைப்பிடிக்கவேண்டும் என்றார் அவர்(dinamani)

No comments:

Post a Comment