Monday, December 6, 2010
கவிஞர் வைரமுத்துவின் 1000 பாடல்கள் தொகுப்பு நூல்
கவிஞர் வைரமுத்து கடந்த 30 வருடங்களாக சினிமா பாடல்கள் எழுதிவருகிறார். இதுவரை அவர் 7000 பாடல்களுக்குமேல் எழுதி இருக்கிறார். அந்த 7000 பாடல்களில் இருந்து 1000 பாடல்களை கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்து முழு தொகுப்பு நூலாக வெளியிடுகிறார். ஆயுரம் பாடல்களுக்கு முன்னுரை எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.
நிழல்கள் படம் தொடங்கி எந்திரன் படம் வரையிலான படங்களில் இருந்து முக்கியமான பாடல்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த நூல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூலை வெளிஎடுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment