Wednesday, December 29, 2010

"நந்திதா போல் நான்'





ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் மீரா வாசுதேவன். ""பெயரிடப்படாத ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். நல்ல கதை. எனக்கும் நல்ல கேரக்டர். மலையாளத்தில் "கலி' என்ற படத்தில் நடிக்கிறேன். அனில் என்பவர் படத்தை இயக்குகிறார். கலாபவன்மணி, இந்திரஜித்  ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதுவும் ஒரு வித்தியாசமான கதை. ஹிந்திப் படத்தின் ஷூட்டிங் 10 நாள்கள் முடிந்து விட்டன. மொத்தம் 30 நாள்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். தமிழில் இப்போது வெளியாகி உள்ள "ஆட்டநாயகன்' படத்தின் என் கேரக்டருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. கதை சொல்ல புதிய இயக்குநர்கள் நிறைய பேர் அணுகி இருக்கிறார்கள். ஜனவரி முதல் கதைகள் கேட்கப் போகிறேன். அதன் பின் தமிழ் சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். தனி ஹீரோயின் என்பதில் மட்டுமே எனக்கு பிடிவாதம் கிடையாது. நந்திதாதாஸ் போன்று பெயரெடுக்க வேண்டும். எந்த கேரக்டருக்கும் தயார்'' என்றார் மீரா வாசுதேவன்.

No comments:

Post a Comment