Saturday, November 12, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுகம் அஸ்வினுக்கு இன்று சென்னையி்ல் திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய சுழற்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ள அஸ்வின், தனது பள்ளித் தோழியான பிரீத்தியை நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

மோசமாக ஆட்டம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் அணியில் சேர்த்து கொள்ளப்பட்டார்.

டெல்லியில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் கோல்கட்டாவில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நாளை (நவம்பர் 13 ம் தேதி) அஸ்வினுக்கு திருமணம் நடக்க உள்ளது.

சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கு 25 வயதாகிறது. அவர் தனது பள்ளித் தோழியான பிரீத்தி நாராயணனை நாளை திருமணம் செய்ய உள்ளார். அடுத்த நாள் கோல்காட்டாவில் டெஸ்ட் போட்டி உள்ளதால் இந்திய அணியின் சகவீரர்கள் யாரும் திருமணத்தில் கலந்து வாய்ப்பில்லை. முன்னாள் வீரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நாளை திருமணம் முடிந்த பிறகு கோல்கட்டாவில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள அஸ்வின் புறப்பட்டு செல்ல உள்ளார்.

No comments:

Post a Comment