Tuesday, November 29, 2011

தனுஷ் பாட்டைக் கிண்டல் செய்ய வேண்டாம் - சொல்கிறார் சிம்பு

கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார்.

3 படத்துக்காக தனுஷ் எழுதிப் பாடியுள்ள வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் இன்று இந்தியா முழுக்க முணுமுணுக்கப்படும் பாடலாகிவிட்டது. பாலிவுட் சாதனையாளர்
அமிதாப் பச்சன், அவர் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் என பலரும் இந்தப் பாடலை தங்களுக்குப் பிடித்த ஒன்றாகக் கூறியுள்ளனர்.

வட இந்திய செய்திச் சேனல்கள் இந்தப் பாடலை வைத்து அரசியல் தலைவர்களை கிண்டலடித்து அரசியல் காமெடி நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால் சிம்புவின் ரசிகர்களோ, தமிழ்க் கொலை செய்கிறார் தனுஷ் என இணையதளங்கள், போஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தச் செயலை கண்டித்துள்ளார் நடிகர் சிம்பு.

தனது பேஸ்புக்ஸகில் இதுகுறித்த அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடல்களுடன் ஒப்பிட வேண்டாம். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பாடலாக்குவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது.

அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். பாட்டை கேலி செய்த ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்," என்று கூறியுள்ளார்.(thatstamil)

No comments:

Post a Comment