Monday, December 5, 2011

3 படத்திலிருந்து விலகியது ஏன்?

 தனுஷ் நடிக்கும் ‘3’ படத்திலிருந்து விலகியதற்கு கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என்று அமலா பால் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சமீபகாலமாக என்னைப் பற்றி தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு எப்படி விளக்கம் சொல்ல என்று தெரியவில்லை. ‘3’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. தெலுங்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் அந்த தேதியில் நடிக்க
இயலவில்லை. ஐஸ்வர்யா, படத்தை ஒரே கட்டமாக முடிக்க இருப்பதாகச் சொன்னார். அதனால் என்னால் நடிக்க முடியாமல் போனது. இதுதான் நடந்தது. இதை விட்டுவிட்டு ஆளாளுக்கு ஏதோ சொல்கிறார்கள். இந்தப் படத்தின், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. தனுஷ் சிறப்பாக அதை உருவாக்கியிருக்கிறார். அதில் நான் இல்லாதது எனக்கு வருத்தம் இல்லை. இதைவிட சிறப்பான வாய்ப்பு எனக்கு வரும் என நினைக்கிறேன்.  நயன்தாரா நடிப்பை விட்டுவிட்டதால், அவர் இடத்தை பிடிக்க போட்டிப்போடுகிறேன் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அவர் சிறந்த நடிகை. என்னை, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போல் இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை. நான் நானாக இருக்கவே எப்போதும் விரும்புகிறேன். இவ்வாறு அமலா பால் கூறினார்.(thanks dinakaran)

No comments:

Post a Comment