Friday, July 6, 2012

போஸ் கொடுத்தேன், ஆனால் டாப்லெஸ்ஸாக இல்லை: காஜல்

எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தேன். ஆனால் டாப்லெஸ்ஸாக இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்கும் காஜல் அகர்வாலுக்கும் அவ்வளவு ராசி. அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். லேட்டஸ்ட் சர்ச்சை எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக அதாவது அரை நிர்வாணமாக போஸ் கொடுத்தது. அந்த படம் பத்திரிக்கையின்
அட்டையில் வந்துள்ளது.

தனது டாப்லெஸ் படத்தைப் பார்த்த காஜல் கொதித்து விட்டார். அடப்பாவிங்களா நான் ஆடையுடன் தானே போஸ் கொடுத்தேன். இப்ப என்னவென்றால் டாப்லெஸ்ஸாக இருக்கிறதே. இது எனது போட்டோவே இல்லை. மார்பிங் செய்துவிட்டார்கள் என்று படபடக்கிறார். 

இது குறித்து காஜல் மேலும் கூறுகையில்,

நான் கருப்பு டிரஸ் போட்டு தான் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அவர்கள் எனக்கு அனுப்பிய காப்பி கூட என்னிடம் இருக்கிறது. அப்படி இருக்கையில் மார்பிங் செய்து இப்படி ஒரு போட்டோவை அதுவும் அட்டையில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை நான் சும்மா விடப் போவதில்லை. நான் அந்த பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றும் கொடுக்கவில்லை. நான் ஒரு நாளும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்க மாட்டேன். நான் அப்படி பட்டவள் இல்லை என்றார்.

தான் ஒருபோதும் பிகினியில் திரையில் தோன்றமாட்டேன் என்றும், முத்த காட்சிகளுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று காஜல் தெரிவித்ததாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சையின் மறுபெயர் காஜலோ!(thatstamil.com)

No comments:

Post a Comment