Friday, July 6, 2012

ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார் பிரபுதேவா


பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷயக் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான ரவுடிரத்தோர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி பிரபுதேவாவை இந்தி திரையுலகில் உயரத்துக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளும் அவரை நாடி வருகின்றன. இந்நிலையில்
பிரவுதேவா மும்பையில் இருந்தபடி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மும்பையில் வீடு பார்த்து வந்தார். இதனையறிந்த ஸ்ரீதேவி, மும்பையில் உள்ள தனது கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் குடியேறும்படி பிரபுதேவாவை கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட பிரபுதேவா விரைவில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார்.(dinamani)

No comments:

Post a Comment