Sunday, October 31, 2010

தேவை உடனடி தண்டனை!

     கோவையில் அக்க தம்பி கடத்தி செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.  பணத்துக்காக ஒரு டிரைவரும் அவருடைய நண்பரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளனர்.  மேலும் அந்த அப்பாவி சிறுமியை பாலியல் சித்ரவாதை செய்து பிறகு கொன்றுள்ளனர்.  கடத்திய டிரைவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரேதத்தை கைப்பத்தி  உள்ளனர் போலீசார்.  
     கோவை ரன்கேகவுடார் வீதியில் கதான்பட்டி சந்து பகுதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்.  துணி கடை வைத்துள்ளார்.  இவரது மகள் முஸ்கின் மற்றும் மகன் ரித்திக் முறையே 5 மற்றும் 3 வகுப்புகளில் படித்துவந்தனர். வெள்ளிகிழமை அன்று இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக பள்ளிவாகனதிர்காக காத்துகொண்டு இருந்திருக்கின்றனர்.  அப்போது வந்த ஆம்னி வேனில் கடத்தப்பட்டுள்ளனர்.  
     போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபடவே முழு முனைப்புடன் இரவு பகலாக விசாரணைசெய்து கடத்திய குற்றவாளி ஒரு டிரைவர் என கண்டுபிடித்தனர்.  அவருடைய மொபைல் போனின் நம்பரை கொண்டு அவர்கள் திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
     இதனிடையே கேட்டிமேடு கால்வாயில் ஸ்கூல் பாக் ஒன்று மிதந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு அது சிருவனுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.  பிறகு டிரைவரும் கைதுசெய்யப்பட்டார்.  அவரை விசாரித்தபோது குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்ததை ஒப்புகொண்டார்.  பிறகு கால்வாய்க்கு விரைந்த போலீசார் இரு பச்சிளம் குழந்தைகளின் பிரேதத்தை மீட்டனர்.  
      மனதை உருக்கும் இந்த சம்பவம் இரண்டு நாட்களாக மனதை உருக்கி தூங்கவிடாமல் செய்கிறது.  ஆதி காலம் முதல் நமது பண்பாடு குழந்தைகளை தெய்வங்களின் மறு உருவமாகவே உருவகம் செய்கிறது.  அந்த குழந்தைகளின்  முகங்களை பாருங்கள் அதனை கொலை செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வந்திருக்கும்.  கண்டிப்பாக அவர்கள் மனிதனாக இருக்கவே முடியாது.  அரக்கர்கள் கூட அந்த காலத்தில் முறை அறிந்துதான்  கொலைகூட செய்வார்கள்.  எனவே இவர்கள் அரக்கர்கள் கூட அல்ல, அதற்கும் மேல் கொடியவர்கள் வார்த்தைகளால் வர்நிக்கமுடியவில்லை அந்த கயவர்களை.  
     அந்த பெற்றோர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அந்த கயவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கபோகிறது?  வழக்கம்போல்தான் இருப்பது முப்பது ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம் அல்லது அவர்கள் தப்பித்துவிடலாம்.  
     நமது தண்டனை வழங்கும் முறையை நாம் மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.  கண்முன்னே கொடிய குற்றவாளிகள் நமது சட்டத்தின் முன்பு நியாய வாதிகளாக ஆகிவிடுவதை சில நேரங்களின் தடுக்கமுடியவில்லை நமது பழைய சட்டங்களால் இனியும் எந்த பயனும் இல்லை. அதனால்தான் கசாப் போன்ற குற்றவாளிகளுக்கு நம்மால் இன்னும் தண்டனை வழங்க  முடியவில்லை. இந்த பழைய சட்டங்களை வைத்துகொண்டு பயனில்லை என்றே நம்மை நினைக்கவைக்கிறது.  இம்மாதிரியான கொடிய கொலைகாரர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டனை வழங்கப்படவேண்டும்.  அப்பொழுதுதான் சட்டத்தின் பெயரில் மக்களுக்கு நம்ம்பிக்கை பிறக்கும்.  அரபிக் நாடுகளைப்போல் அவருகுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவேண்டும்.  எதிர்காலத்தை இழந்துவிட்டு நிகழ் காலத்தை கேள்விகுரிஆக்கி நிற்கும் பெற்றோர்களுக்கு இதுவே மருந்தாகும்.   

No comments:

Post a Comment