Sunday, October 31, 2010

சேவாக் ஆதரவு

     நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறைக்கு சேவாக் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.  மேலும் தான் பல முறை நடுவர்களின் தவறான முடிவினால் ஆட்டம் இழந்துள்ளதாகவும் இம்முறை செயல்படுத்தப்பட்டால் தவறான முடிவு எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
     முன்னதாக இந்திய அணியின் நச்சத்திர வீரர் சச்சின் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ஆனால் முன்னால் கேப்டன் டிராவிட் இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  டோனி இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் "நவீன உதவிகளுடன் நடுவரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முடியுமே தவிர பெரிதாக எந்த வித்தியாசமும் வந்துவிட போவதில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
     நடக்க இருக்கும் நியூசிலாந்து தொடரிலும் உலக கோப்பை தொடரிலும் இதனை அமுல்படுத்தவேண்டும் என்று சேவாக் கூறினார்.

No comments:

Post a Comment