Wednesday, November 3, 2010

10 வயது குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாயானாள்

பத்து வயதே ஆன பெண் குழந்தை ஒன்று குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஸ்பெயினில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைத் தாயாக்கிய தகப்பனும் பதின்ம வயதை உடைய சிறுவனே. புதிய குழந்தையை இந்தக் குழந்தையிடமே விடுவதா அல்லது அரசே பராமரிப்பதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெரெஜ் டி லா ஃப்ரன்டிரா என்ற நகரில் கடந்த வாரம் இச்சம்பவம் நடைபெற்றதாக அந்தலூசியா பகுதியின் சமூக நலத்துறை அமைச்சர் மிகேலா நவரோ கூறியுள்ளார்.

இந்தக் குழந்தையின் தந்தையும் பதின்ம வயதைச் சேர்ந்த சிறுவன்தான் என்று கூறிய நவரோ, குழந்தையும் குழந்தைத் தாயும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறினார். புதிய குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா போன்ற மற்ற விவரங்களை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.

குழந்தையின் தாய் ரொமானிய வம்சத்தைச் சார்ந்தவர் என்று ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இத்தகைய குழந்தைப் பருவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது தங்கள் நாட்டில் வழக்கமான ஒன்று என்று குழந்தைத் தாய் தனக்கு மருத்துவம் செய்த மருத்துவர்களிடம் கூறியதாக டியாரியோ டி ஜெரெஜ் என்ற நாளிதழ் கூறியுள்ளது.

ரொமானியாவைச் சேர்ந்த இக்குழந்தைத் தாய், ஸ்பெயினுக்கு வரும் முன்னரே கர்ப்பம் அடைந்ததாகவும் ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

அந்தலூசியா பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு 15 வயதை அடையும் முன்னரே 48 குழந்தைகள் குழந்தைகளைப் பெற்றெடுத்தாகவும் ஸ்பெயின் நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 177 என்றும் ஸ்பெயின் தேசிய புள்ளிவிவரக் கழகத்தின் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது
thanks inneram.com

No comments:

Post a Comment