Saturday, November 20, 2010

ஊழலில் ஈடுபடக் கூடாது : அமைச்சர்களுக்கு பவார் அறிவுரை



""மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் யாரும் ஊழல் விவகாரங்களிலோ, சர்ச்சையான விஷயங்களிலோ சிக்கக் கூடாது,'' என, அக்கட்சி தலைவர் சரத்பவார் அறிவுறுத்தியுள்ளார். மத்திய விவசாயத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட அமைச்சர்கள், நேற்று முன்தினம் மாலை, தெற்கு மும்பையில் உள்ள பவாரின் வீட்டில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, சரத்பவார் கூறுகையில், "காங்கிரசுடனான கூட்டணி சிறப்பாக இருந்து வருகிறது. அது சுமுகமாக நீடிக்க அனைத்து அமைச்சர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊழல் விவகாரங்களிலோ, சர்ச்சைகளிலோ அமைச்சர்கள் சிக்கி, கட்சிக்கும், கூட்டணிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது' என்றார்.(dinamalar)

No comments:

Post a Comment