Saturday, November 6, 2010

பார்திவ் படேல் வீட்டில் தீபாவளி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி



அகமதாபாத், நவ.5: தங்கள் வீடுகளை விட்டு தொலைவில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினர், தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாட இயலாத நிலையில், குஜராத் ரஞ்சி அணியின் கேப்டன் பார்திவ் படேல் வீட்டில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்திய அணி கேப்டன் தோனி, சேவாக், சச்சின், சுரேஷ் ரெய்னா, லக்‌ஷ்மண் உள்ளிட்ட வீரர்கள் பார்திவ் படேல் வீட்டுக்கு வந்தனர். பார்திவ்வின் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று மிக உற்சாகமாக பட்டாசுகளைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடினர்.

கடந்த 2 வருடங்களாக பார்திவ் படேல் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். தற்போது அவர் குஜராத் ரஞ்சி அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி வீரர்களும் தீபாவளி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். நியூசிலாந்து வீரர்களுடன் இந்தியா வந்துள்ள அவர்களின் மனைவி குழந்தைகளையும் தீபாவளி உற்சாகம் தொற்றிக்கொண்டது. இனிப்புகளை உண்டும் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளிப் பண்டிகை உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.(dinamani)

No comments:

Post a Comment