Sunday, October 2, 2011

பிரேமலதா மீது வழக்கு

 தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மீது மதுரையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு தேமுதிக சார்பில் கவியரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் வாகனங்களைப் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக கூறி மதுரை போலீஸார் பிரேமலதா, வேட்பாளர் கவியரசு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்து வந்த பின்னர் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் மீது அதுவும் விஜயகாந்த் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment