Tuesday, March 29, 2011

நானும் ரோஷக்காரன்தான்: விஜயகாந்த்

 "நானும் ரோஷக்காரன்தான்' என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தாக்கிப் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகனுக்கு ஆதரவாகவும், தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கர், பாப்பிரெட்டிப்பட்டி

Friday, March 25, 2011

தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்: விஜயகாந்த் ஆவேசம்


 ""எகிப்தில் முபாரக்கிற்கு எதிராகவும்; லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியை போல், தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும்,'' என, விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவலிங்கத்தை

Friday, March 18, 2011

வாக்களிப்போர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

வாக்களிப்போர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை நீங்கள் அறிய விரும்பினால் இங்கே சுடுக்குக .  

Monday, March 14, 2011

புதுக்கட்சி துவங்கபோகிறார் மன்சூர் அலிகான்


தேர்தல் நேரத்தில் எதையாவது பரபரப்பாக செய்பவர் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். இந்‌தமுறையும் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்துள்ளார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அவர் தனித்து போட்டியிடப்போவதாகவும், தேர்தலுக்கு பிறகு "தமிழ் பேரரசு" என்ற ஒரு அமைப்பை துவங்க இருப்பதாகவும் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய சூழலில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் யாருடன் கூட்டணி வைப்பது, எவ்வளவு தொகுதிகள் பெறுவது என்று தான் கவனம் செலுத்துகின்றனர், மக்களை மறந்து விட்டனர். அப்படியே எதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தால் தேர்தல் நெருங்கும்‌ போது செய்வார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். இது போன்ற செயல்களைப் பார்த்து பார்த்து எனக்கு மனது வெறுத்துப் போய்விட்டது. எனவே இந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் சேராமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.
ஏற்கனவே 1999ல் பார்லிமென்ட் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வாங்கி இருக்கிறேன். அதன்பின்னர் திருச்சி பார்லிமென்ட் தேர்தலிலும் நின்றேன். அங்கு முக்கிய ஆளும் கட்சி தோற்பதற்கு நான்தான் காரணம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தமுறை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவது தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க பாடுபடுவேன்.
தமிழகத்தில் தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர்தான் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழ் பேரரசு என்ற அமைப்பைத் துவங்க இருக்கிறேன், என்றார். (dinamalar)

என்ன ஆச்சு தோனிக்கு?


 இந்திய கேப்டன் தோனி "பேட்டிங்கில்' தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய வீரர்கள் ரசிகர்களுக்காக அல்லாமல் தேசத்துக்காக விளையாட வேண்டும் என "அட்வைஸ்' செய்துள்ள இவர், முதலில் தனது ஆட்டத்தில்

Friday, March 11, 2011

இங்கிலாந்துக்கு மீண்டும் அவமானம்

உலக கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் வங்கதேச அணி, இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த போதும், "டெயிலெண்டரான ஷபியுல் இஸ்லாம் அதிரடியாக ஆடி, வங்கதேசத்தின் வெற்றியை <உறுதி செய்தார். ஏற்கனவே "கத்துக்குட்டி

Tuesday, March 8, 2011

டில்லியில் நடந்த பரபரப்பு கிளைமாக்ஸ் காட்சிகள்


தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பது என முடிவே செய்து முடிக்கப்பட்டு, அதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டு, தி.மு.க., அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தனர். தி.மு.க.,

Monday, March 7, 2011

காங்கிரசுக்கு கருணாநிதி பணிந்தார்


"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர

Friday, March 4, 2011

41 சீட் ஒதுக்கீடு: ஜெ., - விஜயகாந்த் ஒப்பந்தம்


 அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

Wednesday, March 2, 2011

உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி


உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அதிரடி:
 இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.
டிராட் சாதனை:
பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கெவின் அதிரடி:கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
--------------
அதிவேக சதம்
நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.
--------------
 "சேஸ்' சாதனை
நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.
--------
இங்கிலாந்துக்கு அவமானம்
"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.(dinamalar)