Sunday, February 27, 2011

ஆட்சியில் பங்கு கொடுத்தால் தான் வெறுப்பை மறந்து தேர்தல் பணி : இளங்கோவன்


""ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெறுப்பை மறந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இதில்,

தி.மு.க., - காங்., தொகுதி பங்கீட்டில் இறுக்கம்


தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்படுத்தியுள்ள ஐவர் குழுவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட தகவல்களை காங்கிரஸ் டில்லி தலைமையுடன் பகிர்ந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும்,

முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்




சென்னை, பிப். 27: 2ஜி அலைக்கற்றை ஊழல் புகாரில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உள்ளதாகக் கருதப்படும் தொடர்பை விசாரிக்க வசதியாக அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"2-ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வை உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. மூலம் நேரடியாகக்

Saturday, February 26, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!


தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., - பா.ம.க., உறவு. "துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய்,

அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?




தேமுதிக தனது நிலையை தெளிவாக்கிவிட்ட நிலையில், திமுக அணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள்

அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும், சாலைப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். தி.மு.க. அரசு உண்ணாவிரதம் இருந்த சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசவில்லை. சங்கங்களின் பிரதிநிதிகள் செய்வதறியாமல்

Friday, February 25, 2011

சர்வாதிகாரம்?


அரசு ஊழியர்கள் என்றாலே கருணாநிதிக்கு தனி பாசம் உண்டு.  தேர்தல் வந்துவிட்டால் அவர்கள் கேட்காமலேயே பல சலுகைகளை அள்ளி வழங்கும் வள்ளல்  குணம் அவருக்கு உண்டு.  நேற்றும் இப்படிதான் போலிசாரின் மூலம் அள்ளி வழங்குகிறார் கண்டுகளியுங்கள்.  "ஒரு வேலை கலைங்கருக்கு தெரிந்து விட்டதோ அடுத்த முறை ஜெயிக்க முடியாது என்று?" 

சுறுசுறுப்பாகும் தே.மு.தி.க., தொண்டர்கள்; சூடுபிடிக்கும் தேர்தல் பணி


அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதால், தேர்தல் களத்தில் திசை தெரியாமல் சுற்றித் திரிந்த தே.மு.தி.க., தொண்டர்கள், தற்போது சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தி.மு.க., தரப்பில், பா.ம.க.,விற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டிற்கு, ஐவர் குழுக்களுக்கிடையேயான பேச்சு

Thursday, February 24, 2011

கோபத்தில் காங்கிரஸ்!






காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும், வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு,

கருணாநிதிக்கு அடுத்த அடி - கைகோர்த்தது அ.தி.மு.க-தே.மு.தி.க

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதை அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன்

Wednesday, February 23, 2011

திமுக-காங்கிரஸ் கூட்டணி 'பணால்' ஆகுமா?


 "கூட்டணியில் தொடர காங்கிரஸ் தொடர்ந்து நிபந்தனை விதிக்கும் பட்சத்தில், தற்போது நம்மிடம் உள்ள கூட்டணிக் கட்சிகளைக் கொண்டே வெற்றி பெறுவோம்' என, முதல்வர் கருணாநிதி

முதல் நாளிலேயே...அவசியமா?

முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள்

Tuesday, February 22, 2011

தவசி...


தினமணி தலையங்கம் உங்களுக்காக!




ஓருவழியாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். ஆயினும், காலதாமதமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட அவரைப் பாராட்ட நமக்கு மனம் வரவில்லை.
ஜேபிசி அறிவிக்கவில்லை என்றாலும் குறை சொல்கிறீர்கள், அறிவித்தாலும்

கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்


 ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி,

தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்


தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க.,வினர், இப்போதே பணப் பட்டுவாடாவை துவக்கிவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை, தேர்தல் கமிஷன், எப்படி தடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள,

Sunday, February 20, 2011

கேப்டன் குரல்-2


அரசியல் கட்சிகளின் விண்ணை முட்டும் வருமானம்


காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக கோடிகளை தொட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியிருப்பதும் தெரிந்துள்ளது.
"அசோசியேஷன் ஆப் டெமாகிரடிக் ரிபார்ம்ஸ்' என்ற அமைப்பு,

கச்சத்தீவுக்கு சென்று போராட்டம்! தேமுதிக அறிவிப்பு


 உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க.,வினர், மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் சாயல்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் ஆளும்கட்சியை சரமாரியாக விமர்ச்சித்த சிங்கை ஜின்னாவை

மெஜாரிட்டி பெறுவது எப்படி?


கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகளை கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு கூட்டணியால் பலன் ஏற்படுவதை விட, இழப்பே அதிகம் ஏற்பட உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர,

Saturday, February 19, 2011

எம்.ஜி.ஆர். சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்


 திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் வெல்வதற்கு எம்.ஜி.ஆர். சக்திகள் ஒருங்கிணையவேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 சாய ஆலைகள் மூடப்பட்ட பிரச்னையைக் கண்டித்து,

Friday, February 18, 2011

மக்கள் வாழ்க்கையில் தி.மு.க.,வுக்கு அக்கறையில்லை


 ""பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து தி.மு.க., அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை,'' என தே.மு.தி.க., அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் திருப்பூரில் பேசினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் அரிசிக் கடை வீதியில்,

Thursday, February 17, 2011

கலைஞர் டி.வி-சி.பி.ஐ.,அதிரடி ரெய்டு!


 ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும்

கேப்டன் குரல்-1


தேர்தல் 2011... ரஜினி 'கிரேட் எஸ்கேப்'!

1994-லிருந்து தேர்தல் என்று அறிவிப்பு வந்த கையோடு, பேசப்படும் இன்னொரு பெயர் ரஜினி வாய்ஸ்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என அலசல் கட்டுரைகள்

Tuesday, February 15, 2011

ஜில்லா விட்டு



யாருடன் கூட்டணி?


 திருமங்கலம் அருகே, குல தெய்வம் கோவிலுக்கு, நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார்.

திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு

Monday, February 14, 2011

வதந்திகளை நம்பாதீர்கள்





கௌதம்மேனனின் "நடுநிசி நாய்கள்' அனுபவம் எப்படி?


இது எனக்கு முக்கியமான படம். கதையை கேட்காமலேயே கௌதம் மீதிருந்த நம்பிக்கையில் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டேன். ஷூட்டிங் ஆரம்பித்த இரண்டு நாள்களில் கௌதம் மேனனைத்

ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்


 பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இத‌‌ைனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பால் உற்பத்தியாளர்‌கள் நலச்சங்கம் மாநில தலைவர் செங்கோட்டுவேல் அறிவித்தார். மேலும் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Friday, February 11, 2011

பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி


: எகிப்து அரசியலில், நேற்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பவங்கள் மளமளவென நடந்து முடிந்தன. "பதவி விலக முடியாது' என்ற அதிபர் முபாரக்கின் உரையால் கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகை, அரசு "டிவி' போன்ற இடங்களை முற்றுகையிட்டனர். தாரிர் சதுக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பீதியடைந்த அதிபர் முபாரக், தலைநகர் கெய்ரோவை விட்டு தப்பி ஓடியதாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவில் அவர் பதவி விலகினார்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்(82) பதவி விலகக் கோரி,

பால் நிறுவனங்களை மிரட்டவில்லை : அமைச்சர் விளக்கம்


 பால் உற்பத்தியாளர் போராட்டம், தனியார் பால் பண்ணைகள், "சீல்' வைக்கப்பட்டது தொடர்பாக, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு முறை கூட பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தி.மு.க.,

ரூ.3000 கோடி லஞ்சம் வாங்கினாரா ராஜா?


நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76,000 கோடி இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு துறை மாஜி அமைச்சர் ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்தது வாயிலாக, ராஜா ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக பெற்றிருக்கலாம் என சி.பி.ஐ., - மற்றும் அமலாக்கப்பிரhவு அதிகாரிகள் விசாரணையில் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற தனியார் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்த கட் ஆப் தேதியை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த( 2007 அக்டோபர் 21ம் தேதியில்) இருந்து எந்த வி‌த முன் அறிவிப்பும் இன்றி (2007 செப்டம்பர் 25க்கு) மாற்றினார் ராஜா என்பது புகார். இதனால் ஆதாயம் பெற்ற தனியார் நிறுவனங்களிடம், ராஜா லஞ்சமாக பெற்ற தொகை ரூ. 3000 கோடி வரை இருக்கும் என்பது சி.பி.ஐ., - அமலாக்கப்பிரிவின் கணக்கு.

புலனாய்வு அமைப்புகளின் முதல் கட்ட விசாரணையில், இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று( வியாழக்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த வழக்கு விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இது இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பிடி மேலும் இறுகுகிறது. இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்த யாரையும்,

Thursday, February 10, 2011

ஊழலில் ஒரே மாதிரியான கொள்கையை கடைப்பிடிக்கிறார் கருணாநிதி: ஜெயலலிதா அறிக்கை

 விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வரும்போது 1969-ம் ஆண்டு முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு மாதிரியான கொள்கையை முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில்

மோசடியில் மிகப்பெரியது ஸ்பெக்ட்ரம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு


 "ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குக்கு இணையானது எதுவும் இல்லை. எனவே, இந்த வழக்கு விவகாரத்திற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு

சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார் கருணாநிதி! -சுப்பிரமணிய சாமி

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி விரைவில் ஜெயிலுக்குப் போவார் என்று கூறினார் சுப்பிரமணிய சாமி.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 'ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடலி

Wednesday, February 9, 2011

ராமதாஸ் உச்சகட்ட காமெடி!

       சினிமாவில் வடிவேல் காமடி எவ்வளவு பெரிதோ அதுபோல அரசியலில் நம்ம ராமதாஸ் காமடி பயங்கரமாக இருக்கும்.  வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் நீங்களும் வாய் விட்டு சிரிக்க நேற்று ராமதாஸ் அளித்த பேட்டியை கீழே பதிவிடுகிறேன் படித்து சிரியுங்கள்.  
          "இளைஞர்களை மையமாக வைத்து தேர்தல் வியூகம் அமைத்துள்ளோம். சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக, இளைஞர்கள் மாற வேண்டும். சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சீரழியாதீர்கள்; கொள்கைப்பிடிப்புடன் வாழ உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து தீவிரமாக பணியாற்றுங்கள். கூட்டணி இன்னும் முடிவாகாததால், அது பற்றி இப்போதைக்கு ஏதும் பேச முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பணியாற்ற தயாராக இருங்கள். தொப்புளில் பம்பரம் விடும் நடிகரின் கட்சி வரும் தேர்தலில் புறக்கணிக்கப்பட வேண்டும். இரண்டு திரைப்படம் நடித்தவர்கள் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்கள். சினிமாக்காரர்களின் கையில் தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நடிகர்கள் தங்களை தெய்வங்களாக எண்ணி கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். ஆந்திராவில் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி போனியாகாமல் கட்சியை ஊற்றி மூடிவிட்டார். இந்த நிலைமை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கும் உருவாகும். பா.ம.க.,வை விட நல்ல கொள்கைகள் உள்ள கட்சி தமிழகத்தில் இருப்பது நிருபிக்கப்பட்டால், அந்த கட்சியில் நான் சேர்ந்துவிடுகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்"
     நன்றாக சிரிதீர்களா? வர வர கொள்கையை பற்றியெல்லாம் யார் யார் பேசுவது  என்றே தெரியாமல் போய் விட்டது.  இன்னும் எந்த கட்சி நம்மை சேர்த்துகொள்ளும் என்று காத்திருக்கும் ராமதாசுக்கு இது ஓவராக தெரியவில்லை!  போங்க பாஸ் யாராவது பெரியவங்க இருந்த வந்து பேச  சொல்லுங்க.  ஏற்கனவே விஜயகாந்துடன் மோதித்தான் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அரசியலுக்கு இழுத்துவந்து நீங்கள் அழிந்துகொண்டு இருக்கிறீர்கள்.  பத்தாது என்று இன்னமும் எதிர்பார்கிறீர்கள் போல இருக்கிறதே.  கவலை படாதீர்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு உண்மை புரியும்.  அப்புறம் இன்னும் ஒரு சந்தேகம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜயகாந்துடன் கூட்டணி வைத்துகொள்வதில் எனக்கு சம்மதம் என்று யாரோ சொன்ன மாதிரி ஜாபகம் அது யாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாஸ்.

Saturday, February 5, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்: நீதிமன்றத்தில் சுவாமி கோரிக்கை





: 2-ஜி (ஸ்பெக்ட்ரம்) அலைக்கற்றை வழக்கில் முதல்வர் கருணாநிதியையும் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தில்லியிலுள்ள

2ஜி அலைக்கற்றை ஊழல் - கலைஞர் டிவிக்கு பணம் போனதா?


2ஜி அலைக்கற்றை ஊழலில் கலைஞர்  டிவியும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ராசாவின் கைதை தொடர்ந்து ஊழல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. வருகிற 10ந்தேதி

உடனடி சிகிச்சை தேவை: அப்துல் கலாம்


 "இந்தியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. புற்று நோய் போல் வேகமாக பரவி வருகிறது. புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுவதைப் போல்,

Wednesday, February 2, 2011

ஸ்பெக்ட்ரம்: கடந்து வந்த பாதை


தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத்தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த்தா பெகுரா, ராஜாவின் தனிசெயலாளர் ஆர்.கே.சந்தோலியா கைதுசெய்யப்பட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுமுறைகேட்டால்

தி.மு.க விலிருந்து இன்று ராஜா நீக்கபடுவாரா?

      பரபரப்பு அரசியல் பின்னணியுடன் இன்று தி.மு.க செயல் குழு கூடுகிறது.  செயல்குழுவில் இன்று ஊழல் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறபடுகிறது.  இதுவரை ஊழலே நடைபெற வில்லை என்று கூறிவந்த தி.மு.க தற்பொழுது தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தால் அது தனது வெற்றியை பாதிக்கும் என்று நினைக்கிறது.  எனவே டெல்லி பயணத்தின் பொது இதற்க்கு முடிவு கட்ட நினைத்த கருணாநிதி தமிழகம் திரும்பிவந்தவுடன் ராஜாவை கைது செய்துள்ளனர்.  மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று கலைஞர் தனது பெயரை காப்பாதிகொள்ள ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பெயரளவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  
     ஆயுரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்துவார்கள் அதுபோல கோடி பொய் சொல்லியாவது தான் மீண்டும் முதலமைச்சர் ஆக  வேண்டும் என்று விரும்புகிறார் கருணாநிதி.  என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.   

ராஜா கைது - கதை, திரைகதை, வசனம் கருணாநிதி?

     ஒரு வழியாக நேற்று ஊழல் ராஜா கைது செய்யபட்டிருக்கிறார் என்று பெருமூச்சி விடும் நேரத்திலேயே இதற்குள் பல விஷயங்கள் சம்பந்தபட்டிருபது தெரிகிறது.  சில தினங்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்வதற்காக டெல்லிக்கு கருணாநிதி பயணம் மேற்கொண்டார்.  அப்போது பல சிக்கல்களுக்கு இடையே சோனியாவை சந்தித்த கருணாநிதி கூட்டணி பற்றி பேசினார்.  
     இது பற்றி கருத்து தெரிவித்த சோனியா ஊழல் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில் தமக்கு சிக்கல்தான் என்றும் அதனால் ராஜா விஷயத்தில் அதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் இதனால் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டுள்ளதாக கூறினார்.  
     பின்னர் தான் கருணாநிதி ராஜாவை கைது செய்து விட்டு அவரை விட்டுவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுதிருப்பதுபோல் ஆகிவிடும் இதனால் ஓரளவு பெயரை காபாதிகொள்ளலாம் என்று தனது யோசனையை தெரிவித்திருக்கிறார்.  தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் இழந்த பெயரை காபாதிகொள்ளலாம் என்று கோரி இருக்கிறார்.  
     இதற்க்கு பிறகு அரங்கேரியதுதான் ராஜா கைது நடவடிக்கை என்று அரசியல் வட்டாரத்தில் பேசபடுகிறது.  

மவுனம் காத்த கருணாநிதி


 ராஜா கைது குறித்து, முதல்வர் கருணாநிதி, பத்திரிகையாளர்களிடம் பேசுவதை தவிர்த்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டில்லியில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், முதல்வர் கருணாநிதியின் கருத்தை பெறுவதற்காக, அவரது சி.ஐ.டி., காலனி வீட்டை பத்திரிகை நிருபர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார்.அடுத்ததாக, கோபாலபுரம் வீட்டுக்கு அவர் சென்ற போது, வீடு உள்ள தெருவில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதன்பின், தலைமைச் செயலகத்தில் நடந்த, இலவச கலர், "டிவி' டெண்டர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்.பழைய தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், இரண்டு மணி நேரம் இருந்த முதல்வர், அங்கிருந்து புறப்படும் போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ராஜா கைது விவகாரத்தில் மவுனம் காக்கவே முதல்வர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க.,வின் பொதுக்குழு இன்று நடப்பதால், அதில் ராஜா விவகாரம் பற்றி பேசப்படும் எனத் தெரிகிறது.

மாஜி அமைச்சர் ராஜா கைது

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மத்திய புலனாய்வுத் துறையால் தில்லியில் இன்று கைது செய்தது.


ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவிடம் இன்று காலை 4-வது முறையாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும், ஜனவரி 31-ம் தேதியும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 ஜி ஊழல் தொடர்பாக அவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது